NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
    இந்தியா

    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023, 08:11 pm 1 நிமிட வாசிப்பு
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

    தமிழகத்தில் 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்னும் பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள ரவுடிகளை கைதுசெய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன்படி, 72 மணி நேரத்தில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் கேரளா, மஹாராஷ்டிரா, பீகார் போன்ற வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போன்று வெளிமாநில ரவுடிகளுக்கு தமிழக ரவுடிகளும் தஞ்சம் அளிக்கிறார்களாம். மஹாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால் ரவுடிகள் அங்கு படையெடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ள சில ரவுடிகள் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

    இதனையடுத்து, 'இது போன்று வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்த ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, விரைந்து கைது செய்ய வேண்டும்' என்று காவல்துறைக்கு டிஐஜி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, கடந்த 6 மாதங்களில் ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறினர். அதன் தொடர்ச்சியாக, இவர்களுள் சிலர் வெளிமாநிலங்களில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்றும், அவர்களை அம்மாநில போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்

    காவல்துறை

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023