NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    08:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்னும் பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள ரவுடிகளை கைதுசெய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    அதன்படி, 72 மணி நேரத்தில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    இது குறித்த தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் கேரளா, மஹாராஷ்டிரா, பீகார் போன்ற வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதே போன்று வெளிமாநில ரவுடிகளுக்கு தமிழக ரவுடிகளும் தஞ்சம் அளிக்கிறார்களாம்.

    மஹாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால் ரவுடிகள் அங்கு படையெடுப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ள சில ரவுடிகள் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    பிடி வாரண்ட்

    ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

    இதனையடுத்து, 'இது போன்று வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்த ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, விரைந்து கைது செய்ய வேண்டும்' என்று காவல்துறைக்கு டிஐஜி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, கடந்த 6 மாதங்களில் ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.

    அதன் தொடர்ச்சியாக, இவர்களுள் சிலர் வெளிமாநிலங்களில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்றும்,

    அவர்களை அம்மாநில போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் கோவை
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு ஸ்டாலின்
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது ஸ்டாலின்
    தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம் 5ஜி தொழில்நுட்பம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025