NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி 

    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2024
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு தனித்துவமான வாக்குறுதியைக் கொண்டு வந்துள்ளன.

    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் குப்பத்தில் நடந்த பேரணியில் இந்த வாக்குறுதியை வழங்கினார்.

    "40 நாட்களுக்குப் பிறகு (டிடிபி ஆட்சி அமைத்த பிறகு) தரமான மதுபானம் மட்டுமின்றி, விலையைக் குறைப்பதற்கான பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    ஆந்திரா

     மதுபானங்களின் விலையை உயர்த்தியவர் ஜெகன் மோகன் ரெட்டி

    மேலும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் இருந்து விலகி ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்தியதற்காக ஜெகன் மோகன் ரெட்டியை அவர் சாடினார்.

    மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் என்பது நமது இளைய சகோதரர்களின் கோரிக்கை என்று குப்பத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறினார்.

    "அனைத்து பொருட்களின் விலைகளும் அபரிமிதமாக உயர்ந்துவிட்டன, நான் மதுபானங்களைக் குறிப்பிடும்போது நம் இளைய சகோதரர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மதுபானங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 60 ரூபாயிலிருந்து ரூ. 200 மற்றும் ரூ. 100ஆக விலையை உயர்த்தியவர் ஜெகன் மோகன் ரெட்டி." என்று டிடிபி தலைவர் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    சந்திரபாபு நாயுடு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ஆந்திரா

    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்  கைது
    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் இந்தியா
    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி திருப்பதி
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா

    சந்திரபாபு நாயுடு

    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025