NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
    நீதிமன்றம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது.

    தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை(PFI) பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டு பேசியதால் அவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    பஜ்ரங் தளம் என்பது விஸ்வ ஹிந்து பரிஷத் சங்கத்தின் இளைஞர் பிரிவாகும்.

    இந்த சங்கம் பாஜகவுடன் நேரடி தொடர்புடைய RSS அமைப்பிற்கு மிக நெருக்கமான ஒரு சங்கமாகும்.

    எனவே, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பஜ்ரங் தளத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன்(PFI) ஒப்பிட்டு பேசியதால் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    DETAILS

    ஹிதேஷ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடந்தது 

    "பஜ்ரங் தளம் ஹிந்துஸ்தான்" என்ற அமைப்பின் தலைவரான ஹிதேஷ் பரத்வாஜ் அளித்த புகாரின் பேரில், பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை "சிமி மற்றும் அல்-கொய்தா போன்ற தேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டது" என்று மனுதாரர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம் போன்ற "பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகத்தினரிடையே பகை அல்லது வெறுப்பை" ஊக்குவிக்கும் அமைப்புகளைத் தடை செய்வதாக உறுதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மனுதாரரின் புகாரை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காங்கிரஸ்
    பாஜக
    கர்நாடகா

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    இந்தியா

    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான் உலக கோப்பை
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு பஞ்சாப்
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு  மகாராஷ்டிரா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  மோடி

    காங்கிரஸ்

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜக
    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இந்தியா
    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ இந்தியா

    பாஜக

    கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார் இந்தியா
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை  பாஜக அண்ணாமலை
    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா

    கர்நாடகா

    கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி இந்தியா
    சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்? பசவராஜ் பொம்மை
    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு  தமிழ்நாடு
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025