NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
    பிரமாண்ட பேனா நினைவு சின்னம்

    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

    இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அவருக்கு அங்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது.

    இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவு சின்னம் ஒன்றினை அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாம்.

    கண்ணாடி பாலம் வழியாக கடல் மேல் மக்கள் நடந்து சென்றுநினைவிடத்தை காண்பது போல இதனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என பெயரிட்டுள்ளார்கள்.

    ஜனவரி 30ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

    சென்னை கலைவாணர் அரங்கில், காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம்

    இந்நிலையில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி தமிழக அரசுக்கு கிடைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொதுமக்களிடம் இது குறித்த கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, வரும் ஜனவரி 30ம் தேதியன்று சென்னை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கான பேரிடர் மீட்பு திட்டம் குறித்த விவரங்கள், அவசர கால செயல் திட்டங்கள், வரைவு சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, அதன் செயல்முறை திட்ட சுருக்கமும் சென்னை ரிப்பன் பில்டிங் அலுவலகம், கிண்டி மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலகம், ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்கள் என மக்கள் பார்வைக்காக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெரினா
    தமிழக அரசு

    சமீபத்திய

    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி

    மெரினா

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025