NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
    இந்தியா

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023, 08:31 am 0 நிமிட வாசிப்பு
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
    சென்னை மெரினாவில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு கூடிய மக்கள் கூட்டம்

    தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பூங்கா, கடற்கரை என சுற்றுலா தலங்களில் காலை முதலே கூட்டம் கூட்டமாக குவிய துவங்கினர். மெரினா கடற்கரையில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் திரும்பி செல்லும்பொழுது குப்பைகளை ஆங்காங்கே விட்டு சென்றதால், கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது. இதனையடுத்து, நேற்று இரவுமுதலே கடற்கரையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக துவங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடியவிடிய குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக மெரினாகடற்கரை பகுதிகளில் 10டன் குப்பைகள் சேருமாம். ஆனால், நேற்று காணும் பொங்கலையொட்டி 5 மடங்காக உயர்ந்து 50டன் குப்பைகள் மெரினாவில் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.

    பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளிலும் அலைமோதிய மக்கள் கூட்டம்

    சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் நீச்சல் குளம் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகே, மெரினா கடற்கரை அழகாக காணப்பட்டது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மெரினா கடற்கரையில் நேற்று இரவு முதலே குப்பைகள் அகற்றும் பணி துவங்கிவிட்டது. வழக்கத்தை விட 5 மடங்கு அதிக குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதே போல், பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் கூடியதால் வழக்கத்தை விட அதிகளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 235 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், அதில் 50 டன் குப்பைகள் மெரினா கடற்கரையில் இருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மெரினா கடற்கரை
    சென்னை

    சமீபத்திய

    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு? ஐபிஎல் 2023
    குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன? தோனி கூறியது இது தான் ஐபிஎல் 2023

    மெரினா கடற்கரை

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை கருணாநிதி
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் குடியரசு தினம்
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை

    சென்னை

    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023