NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
    சென்னை மெரினாவில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு கூடிய மக்கள் கூட்டம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது.

    பொதுமக்கள் பூங்கா, கடற்கரை என சுற்றுலா தலங்களில் காலை முதலே கூட்டம் கூட்டமாக குவிய துவங்கினர்.

    மெரினா கடற்கரையில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் திரும்பி செல்லும்பொழுது குப்பைகளை ஆங்காங்கே விட்டு சென்றதால், கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது.

    இதனையடுத்து, நேற்று இரவுமுதலே கடற்கரையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக துவங்கப்பட்டது.

    100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடியவிடிய குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    வழக்கமாக மெரினாகடற்கரை பகுதிகளில் 10டன் குப்பைகள் சேருமாம்.

    ஆனால், நேற்று காணும் பொங்கலையொட்டி 5 மடங்காக உயர்ந்து 50டன் குப்பைகள் மெரினாவில் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.

    235டன் குப்பை அகற்றம்

    பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளிலும் அலைமோதிய மக்கள் கூட்டம்

    சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் நீச்சல் குளம் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அதன் பிறகே, மெரினா கடற்கரை அழகாக காணப்பட்டது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மெரினா கடற்கரையில் நேற்று இரவு முதலே குப்பைகள் அகற்றும் பணி துவங்கிவிட்டது. வழக்கத்தை விட 5 மடங்கு அதிக குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இதே போல், பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் கூடியதால் வழக்கத்தை விட அதிகளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 235 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், அதில் 50 டன் குப்பைகள் மெரினா கடற்கரையில் இருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெரினா கடற்கரை
    சென்னை

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025