NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா?
    ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுகள்! (படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்)

    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    01:28 am

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களைத் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

    2017ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும் தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.

    இந்த பொங்கலுக்கு கிட்டத்தட்ட 2.20 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

    இதில் வழங்கப்பட இருக்கும் வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    வழக்கு

    மனுதாரரின் கோரிக்கை என்ன?

    இதே போல் பொங்கலுக்கு வழங்கப்படும் 20 விவசாய பொருட்களும் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த மனுதாரரின் கோரிக்கை.

    இதுவரை இந்த பொருட்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்தே வாங்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் இந்த பொருட்கள் தரமானதாக இருப்பதில்லை. இதற்கு பதிலாக அவற்றை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் நம் விவசாயிகளும் பலனடைவர் என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர், தமிழக கூட்டுறவுத்துறை செயலர், ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், இந்த வழக்கை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! அமெரிக்கா

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025