NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு
    அப்போதைய கோவை மாவட்ட எஸ்பி பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 11, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்த இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

    அந்த பிரச்சனையில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.

    இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் நிகழ்ந்த போது எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தார்.

    இந்நிலையில் அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு

    பொது நல மனு தாக்கல்

    இந்த பொதுநல மனுவை சென்னையை சேர்ந்த பாலசந்தர் தாக்கல் செய்திருக்கிறார்.

    பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

    2019ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்ப்பட்டனர். அது இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பிற பெண்களால் புகார் அளிக்க முடியாமல் போனது.

    பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய கோவை மாவட்ட எஸ்பி பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    மேலும், அப்போதைய, தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவை
    சென்னை உயர் நீதிமன்றம்
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    தமிழ்நாடு

    சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி சென்னை
    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! வணிக செய்தி
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை கனமழை
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025