NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை 
    பிரதமர் மோடியை சந்தித்த இலங்கை அதிபர் - 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை

    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை 

    எழுதியவர் Nivetha P
    Jul 21, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.

    இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

    அதனை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார்.

    அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

    இந்த பயணத்தில் இலங்கை அதிபருடன் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    விடுதலை 

    இருநாட்டு மேம்பாடு மற்றும் நல் உறவு குறித்து ஆலோசனை 

    அதன்படி, தற்போது புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியோடு ரணில் இருநாட்டு மேம்பாடுகள் மற்றும் நட்புறவு குறித்து ஆலோசனை நடத்திவருகிறார் என்று தெரிகிறது.

    இதனிடையே, கடந்த 8ம்தேதி எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தினை சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை சிறைபிடித்தது.

    மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று(ஜூலை.,21)ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை தடைச்செய்துள்ள இழு வலைகளை கொண்டு, தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக குறிப்பிட்டார்.

    பின்னர் தமிழக மீனவர்கள் 15 பேரினையும் இன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாகக்கூறிய நீதிபதி, இவர்கள் மீண்டும் இதேக்குற்றத்தில் ஈடுபட்டால் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும கூறி உத்தரவிட்டுள்ளார்.

    இருநாட்டு தலைவர்கள் சந்தித்துள்ள அதேநேரத்தில்,தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்படை
    இலங்கை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்  இலங்கை
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025