NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
    இந்தியா

    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்

    எழுதியவர் Nivetha P
    February 21, 2023 | 01:39 pm 0 நிமிட வாசிப்பு
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் எங்களை போன்ற திறமையானவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனவே, மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் கண்டு ஆளுநராக நியமனம் செய்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    வடஇந்தியாவில் இருந்து வருவோருக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்யவேண்டும்

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் தயவு செய்து நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு செயல்படுங்கள். எங்களை போன்றோர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். அதே போல் மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து இங்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதனை சிந்தனை செய்தல் வேண்டும். தமிழகத்தில் சட்டஒழுங்கு குறித்த விவரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். தான் ஒரு ஆளுநர் என்பதால் இது தொடர்பாக கருத்து எதுவும் கூற முடியாது என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழிசை சௌந்தரராஜன்
    கோவை
    தமிழ்நாடு

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி
    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்  வந்தே பாரத்

    கோவை

    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை இந்தியா
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து மதுரை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழி: தமிழ் மொழியின் வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் ஓர் ஆவணப்படம்! தமிழ் திரைப்படம்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஓலா
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 20- பிப்ரவரி 24 வானிலை அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023