NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
    இந்தியா

    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023, 01:31 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

    தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 10ம்தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, குறிப்பிட்டதேதியில் சரியாக மின்பயன்பாட்டிற்கான கணக்கெடுப்பினை எடுத்துவிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவும் இட்டது. ஆனால் எப்பொழுதும்போல ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுக்க செல்வதால், குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் வீடுகளிலும் 100 யூனிட் இலவசம், 500யூனிட் வரை மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் கணக்கெடுப்பிற்கு நேரில் செல்லாமல், முந்தைய பயன்பாட்டைப்பார்த்து கணக்கெடுத்து கொள்வது, அதிகம் மின்சாரத்தை உபயோகிப்போருக்கு குறைத்து கணக்கெடுப்பது போன்ற தவறுகளும் அதிகம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    ஊழியர்கள் செய்யும் காலதாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் பொது மக்கள்

    எனவே, மின்வாரிய தலைமை அதிகாரிகள் பிரிவு தினமும் பிரிவு அலுவலகத்திற்கு சென்று மின் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இதன்மூலம் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதோடு மின் வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும் நேரில் சென்று ஊழியர்கள் கணக்கெடுக்காமல் அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி கணக்கெடுக்க சொல்வதாகவும், இதற்காக அவர்களுக்கு தினமும் ரூ.250கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது. முன்னதாக, கணக்கெடுப்பு செய்த 20நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் விதிமுறை உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். ஏனெனில் கணக்கெடுப்பில் ஏற்படும் கால தாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்டுகிறது என்று நாகர்கோயில் எம்.எல்.ஏ.,தளவாய் சுந்தரம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    மாவட்ட செய்திகள்

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023