NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 10ம்தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

    அதன்படி, குறிப்பிட்டதேதியில் சரியாக மின்பயன்பாட்டிற்கான கணக்கெடுப்பினை எடுத்துவிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவும் இட்டது.

    ஆனால் எப்பொழுதும்போல ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுக்க செல்வதால், குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் வீடுகளிலும் 100 யூனிட் இலவசம், 500யூனிட் வரை மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.

    மேலும் கணக்கெடுப்பிற்கு நேரில் செல்லாமல், முந்தைய பயன்பாட்டைப்பார்த்து கணக்கெடுத்து கொள்வது, அதிகம் மின்சாரத்தை உபயோகிப்போருக்கு குறைத்து கணக்கெடுப்பது போன்ற தவறுகளும் அதிகம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதிகரிக்கும் புகார்கள்

    ஊழியர்கள் செய்யும் காலதாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் பொது மக்கள்

    எனவே, மின்வாரிய தலைமை அதிகாரிகள் பிரிவு தினமும் பிரிவு அலுவலகத்திற்கு சென்று மின் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.

    இதன்மூலம் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதோடு மின் வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் நேரில் சென்று ஊழியர்கள் கணக்கெடுக்காமல் அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி கணக்கெடுக்க சொல்வதாகவும், இதற்காக அவர்களுக்கு தினமும் ரூ.250கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது.

    முன்னதாக, கணக்கெடுப்பு செய்த 20நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் விதிமுறை உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

    ஏனெனில் கணக்கெடுப்பில் ஏற்படும் கால தாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்டுகிறது என்று நாகர்கோயில் எம்.எல்.ஏ.,தளவாய் சுந்தரம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு

    தமிழ்நாடு

    15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு வாகனம்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் போக்குவரத்து விதிகள்
    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது இந்தியா
    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு இந்தியா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025