NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது.

    இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியலில் உள்ளவைகள் உண்டியல் நிரம்பிய பின்னர் எடுக்கப்படும்.

    அதன்படி கடந்த 1,2ம் தேதிகளில் பழனி முருகர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதனையடுத்து 4ம் தேதி தைப்பூச திருவிழா நடந்த நிலையில், மீண்டும் உண்டியல் எண்ணும் பணி நடந்துள்ளது.

    கோயில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில், கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து இந்த பணி 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ரொக்கமாக ரூ.7 கோடி வருவாய்

    3 நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நிறைவுற்றது

    இன்றுடன்(பிப்.,23) சேர்த்து 3 நாட்களாக நடைபெற்ற இந்த பணியின் முடிவில் உண்டியலில் கிடைத்த மொத்த வருவாய் ரொக்கமாக 7 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126ரூபாய் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 1 கிலோ 248 கிராம் தங்கம், 48 கிலோ ஆயிரத்து 277கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுக்கள் முதலியனவும் வருவாயாக கிடைத்துள்ளது.

    இதனை தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி நிறைவடைந்ததாக திருக்கோயில் நிர்வாகம் அண்மையில் தெரிவித்துள்ளது.

    பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில், தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பணியானது கோயில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திண்டுக்கல்
    கோவில்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ தமிழக அரசு

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு

    தமிழ்நாடு

    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் விழுப்புரம்
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025