NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Sep 06, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் துவக்கிவைத்தார்.

    அதன்படி, கரூர், அரவக்குறிச்சி பகுதியருகே வேலன்செட்டியூர் ஊராட்சி அரசு துவக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பட்சத்தில், அங்கு தினந்தோறும் சமையல் செய்ய மகளிர் சுயஉதவி குழுவினை சேர்ந்த சுமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் பட்டியலின சமூகத்தினை சேர்ந்த பெண்மணி என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, அப்பெண் சமைக்கக்கூடாது, அப்படி சமைத்தால் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 15 குழந்தைகள் தொடர்ந்து காலை உணவினை புறக்கணித்துள்ளனர்.

    இந்நிலையில் இதுகுறித்து தன்னார்வலர் ராஜகோபாலும், தோழர்கள் களஅமைப்பினை சேர்ந்தோரும் இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதன்பேரில் ஆட்சியர் பிரபுசங்கரும், மாவட்டக்கல்வி அலுவலர்களும் பள்ளிக்குச்சென்று ஆய்வுச்செய்துள்ளனர்.

    எச்சரிக்கை 

    எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர் 

    அதன் பின்னர் சுமதி சமைத்த உணவை சாப்பிட்ட ஆட்சியர் ஜெய்சங்கர், பெற்றோர்களை அழைத்து மாணவர்கள் மத்தியில் ஆட்சியரும், அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது ஒருவர், அருந்ததியர் இன பெண் சமைத்தால் தனது குழந்தை உண்ணாது என்றும், இல்லையேல் மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    இதனால் கோபமுற்ற ஆட்சியர் எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்ரமணியம் என்னும் பெற்றோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்நிலையம் அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மன்னிப்பு கோரிய பாலசுப்ரமணியம், தனது குழந்தை பள்ளி உணவினை சாப்பிட ஒப்புக்கொண்டுள்ளார்.

    தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த ஆட்சியர், பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் இருக்க கூடாது என்று அறிவுரையும் வழங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    எச்சரிக்கை

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    தமிழ்நாடு

    யூ-ட்யூப் பார்த்து வீட்டில் பிரசவித்த பெண் உயிரிழப்பு - மகப்பேறு மருத்துவர் கூறுவது என்ன  யூடியூப்
    'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல் இஸ்ரோ
    ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் மு.க ஸ்டாலின்

    மு.க ஸ்டாலின்

    ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு  நிதியமைச்சர்
    மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தருமபுரியில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  திருச்சி
    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  பிரதமர் மோடி

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025