NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா

    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    முருகரின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ. 300 கோடி செலவில் கோயில் வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவினை நடத்துவதற்கான திருப்பணிகள் நேற்று(பிப்.,16) துவங்கப்பட்டது.

    அதன் பேரில் முதல்கட்டமாக கோயில் கிழக்கு கோபுரம் மற்றும் சண்முகவிலாச மண்டப நுழைவுவாயிலில் சாலகோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் துவங்கியது.

    இதற்கான பாலாலயம் மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.

    கும்பநீர் கொண்டு கும்பாபிஷேகம்

    பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத்தளத்திற்கு கொண்டு சென்று பந்தல்கால் நடப்பட்டது

    இதனை தொடர்ந்து, காலை 8 மணியளவில் உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே பந்தல்கால் நடப்பட்டது.

    அதன் பின்னர் மரகோபுர சிற்பங்களுக்கு பூஜையில் வைக்கப்பட்டிருந்த கும்ப நீரால் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.

    இந்த விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர், கோயில் இணை ஆணையர், அறங்காவலர், துணை ஆணையர் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்தின் சார்பிலும் முக்கியமான நபர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்செந்தூர்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழ்நாடு

    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!! இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு கோவை
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் நிதின் கட்காரி

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025