NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

    கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51% நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவால் பெற்றோர் மற்றும் பாதுகாவலரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது PM CARES திட்டமாகும்.

    மார்ச் 11, 2020 முதல் மே 5, 2023 வரை குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs) உள்ள 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.

    இந்தியா 

    நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை

    ஆனால், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 558 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன.

    அதே சமயம் 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், 18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நிராகரிக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்படவில்லை.

    ராஜஸ்தான்(1,553), மகாராஷ்டிரா(1,511) மற்றும் உத்தரபிரதேசத்தில்(1,007) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

    மகாராஷ்டிராவில் 855 விண்ணப்பங்களும், ராஜஸ்தானில் இருந்து 210 விண்ணப்பங்களும், உத்தரபிரதேசத்தில் இருந்து 467 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    கொரோனாவால் அனாதையான குழந்தைகளுக்கு நிதியுதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV ஹூண்டாய்
    சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி  குஜராத்
    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு  திரிணாமுல் காங்கிரஸ்
    ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்  ஹரியானா

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 636 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025