NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று தெலுங்கு வருட பிறப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி இன்று(மார்ச்.,23) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    பின்னர் பின்னணி பாடகியான வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்கனவே இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

    ஆனால் அவர் இதற்க்கு மாநில அரசுக்கு உரிமையில்லை என்று கூறி திருப்பியனுப்பிவிட்டார்.

    மின்னஞ்சலில் கோரிக்கை

    இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை

    இந்நிலையில் இந்த மசோதா தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது.

    இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    இதனை தடை செய்ய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்னஞ்சலில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    மனசாட்சியை உறங்க செய்துவிட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது.

    ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிரும் பறிக்கப்படாமல், ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை சென்னை
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி கோவிட் 19
    இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025