NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
    இந்தியா

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023, 12:54 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்

    தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று தெலுங்கு வருட பிறப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று(மார்ச்.,23) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் பின்னணி பாடகியான வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்கனவே இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதற்க்கு மாநில அரசுக்கு உரிமையில்லை என்று கூறி திருப்பியனுப்பிவிட்டார்.

    இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை

    இந்நிலையில் இந்த மசோதா தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. இதுவரை 41 பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தடை செய்ய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்னஞ்சலில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மனசாட்சியை உறங்க செய்துவிட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிரும் பறிக்கப்படாமல், ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  குஜராத்
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் சென்னை
    சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர் பிரதமர்
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலீடு

    தமிழ்நாடு

    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் கோவை
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   திமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023