NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை 
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு அலெர்ட்

    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Nov 04, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

    பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், குறைந்த விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக சில போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு மோசடி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்கி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் செயல்படும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்ப முடியாத அளவிற்கு குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக சில விளம்பரங்களை யூடியூப்'ல் பார்க்கும் பாதிக்கப்பட்டோர் அதில் கொடுக்கப்படும் எண்ணினை தொடர்பு கொள்கிறார்கள்.

    புகார் 

    ஆர்டர் செய்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிரும்படி அறிவுறுத்தல் 

    அப்போது கஸ்டமர் கேர் என்று கூறி அந்த பக்கமிருந்து பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தங்கள் ஆர்டரை செய்து முடித்தவுடன் அந்த பக்கத்தினை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அந்த புகைப்படத்தை அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அதன்படி வீடியோவில் குறிப்பிட்டிருந்த http://luckycrackers.com/ என்னும் இணையதளத்தில் ஆர்டர் செய்து அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பாதிக்கப்பட்டோர் தாங்கள் முன்னதாக தொடர்புக்கொண்டு பேசிய கஸ்டமர் கேர் எண்ணிற்கு அனுப்புகிறார்கள்.

    ஆர்டர் 

    கடந்த 1 மாதத்தில் 25 வழக்குகள் பதிவு 

    அதன் பின்னர் ஆர்டர் செய்த பொருட்களுக்கான பணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட சில நொடிகளில் அந்த இணையதளமும், தொடர்புகொண்ட எண்ணும் அணுக முடியாத நிலைக்கு சென்று விடுகிறது.

    இதன் மூலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும் இழக்கப்படுகிறது, பட்டாசும் வழங்கப்படுவதில்லை.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்று 25 வழக்குகள் பதிய பட்டுள்ளதாக சைபர் க்ரைம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏமாற்றம் 

    பாதுகாப்பான முறையில் செயல்பட பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்கள் 

    இதுபோன்று ஏமாறாமல் இருக்க சைபர் க்ரைம் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

    அதன்படி, குறிப்பிட்ட இணையதளத்தின் சட்டபூர்வ தன்மையினை முதலில் சரிபார்க்க வேண்டும்.

    பின்னர் வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை பார்வையிட வேண்டும்.

    தொடர்ந்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரி, லேண்ட்லைன் எண் உள்ளிட்டவை இணையத்தளத்தில் உள்ளதா? என்பதை சரிபார்த்த பின்னர் ஆன்லைன் கட்டணங்களை பாதுகாப்பான முறையில் செலுத்துவதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    புகார் 

    இணையதளம் அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் 

    பிரபலமில்லா இணையதளம் என்றால் கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தினை தேர்வு செய்வது நல்லது.

    மேலும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல் விவரங்கள், ஸ்க்ரீன்ஷாட்கள் போன்ற பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.

    இதன் மூலம் மோசடி நடக்கும் பட்சத்தில் புகாரளிக்க இந்த பதிவுகள் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் www.cybercrime.gov.in என்னும் இணையதளம் மூலமாகவோ,

    கட்டணமில்லா சைபர் க்ரைம் எண் 1930'க்கு டயல் செய்தும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    பண்டிகை
    சைபர் கிரைம்
    வாட்ஸ்அப்

    சமீபத்திய

    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? இந்தியா
    புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்! தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் புதிய சாட் 'லாக் வசதி'.. அறிமுகப்படுத்தியது மெட்டா! மெட்டா
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!  பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025