NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
    இந்தியா

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023, 10:52 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

    கன்னியாகுமரி மாவட்டம், தோஅருகேவுள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்து சையத் அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளோருக்கு சிரமமாக உள்ளது, எனவே அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று(பிப்.,10) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த கடை உரிமையாளர் கோழி கடை நடத்தவே உரிமம் வைத்துள்ளார், ஆனால் மாடு மற்றும் ஆட்டிறைச்சிகளையும் விற்பனை செய்கிறார் என்று வாதாடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்கள்.

    உரிமம் பெறாமல் நடத்தும் இறைச்சி கடைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு

    அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதியின்றி இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது, கோயில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமபுறப்பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதியில்லை என நீதிபதிகள் கூறினர். மேலும் கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சி கூடங்களை தவிர்த்து வேறிடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என சட்டவிதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் உரிமம்பெறாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்ததால் அவர் அந்த கடையினை மேற்கொண்டு நடத்த கூடாது என்று உத்தரவிட்டது. அதோடு, உரிமம்பெறாமல் நடத்தும் இறைச்சிக்கடைகளை ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    கன்னியாகுமாரி

    சமீபத்திய

    இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா? எலக்ட்ரிக் கார்
    புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா! மெட்டா
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை! ஸ்மார்ட்போன்
    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  தமிழக அரசு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  மு.க ஸ்டாலின்
    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள் மாநில அரசு
    சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி சென்னை
    தமிழகத்தின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  திருப்பூர்

    மாவட்ட செய்திகள்

    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு  தமிழ்நாடு
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்

    கன்னியாகுமாரி

    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது சமூக வலைத்தளம்
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கேரளா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023