NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    10:52 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரி மாவட்டம், தோஅருகேவுள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்து சையத் அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ளோருக்கு சிரமமாக உள்ளது, எனவே அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடக்கோரி மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று(பிப்.,10) விசாரணைக்கு வந்தது.

    அப்போது அந்த கடை உரிமையாளர் கோழி கடை நடத்தவே உரிமம் வைத்துள்ளார், ஆனால் மாடு மற்றும் ஆட்டிறைச்சிகளையும் விற்பனை செய்கிறார் என்று வாதாடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்கள்.

    3 வாரங்கள் விசாரணை

    உரிமம் பெறாமல் நடத்தும் இறைச்சி கடைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு

    அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் உரிய அனுமதியின்றி இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது, கோயில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமபுறப்பகுதிகளில் அனுமதியின்றி இறைச்சி கடை நடத்தவோ, கால்நடைகளை வெட்டவோ அனுமதியில்லை என நீதிபதிகள் கூறினர்.

    மேலும் கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சி கூடங்களை தவிர்த்து வேறிடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம் என சட்டவிதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த வழக்கில் உரிமம்பெறாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்ததால் அவர் அந்த கடையினை மேற்கொண்டு நடத்த கூடாது என்று உத்தரவிட்டது.

    அதோடு, உரிமம்பெறாமல் நடத்தும் இறைச்சிக்கடைகளை ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் கூறப்பட்டது.

    இதுகுறித்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் இந்தியா
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு தமிழக அரசு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025