சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள்
செய்தி முன்னோட்டம்
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது சிறை அறையில் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் பதிவான சிசிடிவி காட்சிகளில் சுகேஷ் சந்திரசேகர் அழுவதும் பதிவாகி இருக்கிறது.
மண்டோலி சிறையில் உள்ள இந்த மோசடி நபரின் சிறை அறையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஒரு Gucci செருப்பு மற்றும் Rs. 80,000 மதிப்புள்ள இரண்டு ஜோடி ஜீன்ஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தியபோது, சுகேஷ் தனது அறையின் மூலையில் நின்று அழுது கொண்டிருப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
சிறைக்குள் ஆடம்பரமாக வாழும் மோசடி நபர் அழும் வீடியோ
#WATCH | Luxury items found in conman Sukesh Chandrasekhar’s jail cell. CCTV visuals from Mandoli jail shared by sources show Sukesh after raids caught items in his jail cell.
— ANI (@ANI) February 23, 2023
(Source: Mandoli Jail Administration) pic.twitter.com/Fr77ZAsGbF