NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

    நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Apr 07, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    வடகிழக்கு பருவமழையானது 2021ம் ஆண்டைவிட கடந்தாண்டு மழை சற்று குறைவாகவே பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    சென்னையில் மக்கள்தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பின் தொலைநோக்கு பார்வையின்மை, போன்ற காரணங்களினால் நிலத்தடிநீரினை போதியளவு நம்மால் சேகரிக்க முடியவில்லை.

    விரிவாக்கத்திற்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் ஏரி, குளங்களின் எண்ணிக்கையானது குறைந்தே காணப்பட்டது.

    2011ம்ஆண்டு விரிவாக்கத்திற்கு பின்னர் சென்னையை சுற்றியுள்ள பல நீர்நிலைகள் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு முன்னர் 210 நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை 'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, வடிகால் உள்பகுதி, சாலையோரம் பூங்கா என 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன்மூலம் கடந்தசில ஆண்டுகள் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது என்று கூறப்படுகிறது.

    மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்

    சென்னை மக்கள் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்-குடிநீர் வாரிய அதிகாரிகள்

    இதனைதொடர்ந்து சாலை, கால்வாய், வடிகால் கட்டமைப்புகள் முதலியன ரூ.3000கோடிக்கு மேல் செலவிடப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால் மழைநீரானது நேரடியாக பூமிக்குள் செல்லும் வகையில் கட்டமைப்புகள் செய்யப்படவில்லை என்று சமூகஆர்வலர்கள் மத்தியில் ஓர் குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் உள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பருவமழை போதியஅளவு பெய்யவில்லை.

    சென்னை முழுவதும் மழை சமமாக பெய்யாத காரணத்தினால் பூமிக்குள் நீர் இறங்கவில்லை. எனவே இந்தாண்டு சென்னையின் குடிநீர் தேவையினை கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஏரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்படவுள்ளது.

    அதனால் இந்தாண்டு கோடையை சமாளிக்க முடியும்.

    சென்னை மக்கள் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.

    மழைநீர் சேமிக்கும் வகையில் கட்டமைப்பினை பொதுமக்கள் அதிகரித்தால் நிலத்தடிநீர் பிரச்சனையினை தவிர்த்துவிடலாம் என்றும் அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    சென்னை

    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு உடற்பயிற்சி
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது தமிழ்நாடு
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025