NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
    இந்தியா

    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 15, 2023, 06:37 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. சர்க்கரை, அரிசி, பாமாயில், து.பருப்பு முதலியன இந்த நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 1,96,16,093 குடும்ப அட்டைகளுக்கு மேற்கண்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், நியாய விலை கடைகள் மூலம் அளிக்கப்படும் வேட்டி, சேலைகளை POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். எந்நிலையிலும் இருப்பு வைத்துக்கொண்டு பொருட்களை வழங்காமல் இருத்தல் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டைகள் கிடையாது

    இதனை தொடர்ந்து, சரியாக காலை 9 மணிக்கு நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும். அதே போல் ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருட்களை பெற்றுவருவது குறித்தும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டை வழங்கப்படக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023