NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 15, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது.

    சர்க்கரை, அரிசி, பாமாயில், து.பருப்பு முதலியன இந்த நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 1,96,16,093 குடும்ப அட்டைகளுக்கு மேற்கண்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அண்மையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த சுற்றறிக்கையில், நியாய விலை கடைகள் மூலம் அளிக்கப்படும் வேட்டி, சேலைகளை POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். எந்நிலையிலும் இருப்பு வைத்துக்கொண்டு பொருட்களை வழங்காமல் இருத்தல் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதிரடி அறிவிப்பு

    இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டைகள் கிடையாது

    இதனை தொடர்ந்து, சரியாக காலை 9 மணிக்கு நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும்.

    அதே போல் ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருட்களை பெற்றுவருவது குறித்தும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு இனி குடும்ப அட்டை வழங்கப்படக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்தியா
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி மதுரை
    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம் திமுக
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து விதிகள்

    இந்தியா

    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் ஜியோ
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை அம்பேத்கர்
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025