NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு
    இந்தியா

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு
    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023, 09:38 am 1 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு
    டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளதோடு, ஒரு வீடியோ பதிவையும் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், நீங்கள் அனுப்பிய பார்சல் திருப்பி வந்துள்ளது, இது குறித்த தகவலை பெற எண் 1ஐ அழுத்துங்கள் என்று ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதனை செய்யும் பட்சத்தில், நீங்கள் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சலில் போதைபொருட்கள் உள்ளது, இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அழைப்பை இணைக்கிறோம் என்று கூறுவார்கள். இதனை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்து விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து காவலாளர்கள் பேசுவதுபோல் பேசி, உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து இதைசெய்துள்ளதால் உங்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளோம் என்று கூறுவார்களாம்.

    தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'-டிஜிபி சைலேந்திர பாபு

    தொடர்ந்து, நேரில் வருமாறும் அழைப்பார்களாம். இக்குற்றத்தை நீங்கள் செய்யவில்லை என்று கூறும் பட்சத்தில் அரசு வழக்கறிஞர் உங்களுடன் பேசுவார் என்று கூறப்படும். அதன் பின்னர், வழக்கறிஞர் என்ற பெயரில் ஒரு நபர் உங்களை தொடர்பு கொண்டு, ரூ.1 லட்சம் பணம் கேட்பார், நீங்கள் அதனை கொடுத்துவிட்டால், மீண்டும் ரூ.5 லட்சம் கேட்கப்படும். இவ்வாறாக உங்கள் பணம் பறிபோகும் என்று சைலேந்திர பாபு வீடியோவில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் இதுபோன்று 70 புகார்கள் வந்துள்ள நிலையில், இவ்வாறு ஏதேனும் அழைப்பு வந்தால் உடனே அதனை துண்டித்து விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு தமிழக அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    சமூக வலைத்தளம்

    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது கன்னியாகுமாரி
    விதவைகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் - வைரலாகும் 5ம் வகுப்பு மாணவன் வைரல் செய்தி
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023