NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்
    மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக FIR பதிவு செய்ய NCW முனைப்பு

    NCW தலைவரை இழிவாக பேசிய TMC MP மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக மகளிர் ஆணையம் புகார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2024
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவி ரேகா ஷர்மா குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    டிஎம்சி தலைவரின் "இழிவான, கசப்பான" கருத்துகளை ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் மஹுவா மொய்த்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியது.

    அதே போல பாஜகவும் மஹுவா மொய்த்ராவை விமர்சித்து, திரிணாமுல் எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது.

    என்ன நடந்தது?

    மஹுவா மொய்த்ரா கூறியது என்ன?

    ஜூலை 4 அன்று, NCW தலைவர் ரேகா சர்மா 121 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் நெரிசலில் காயமடைந்த பெண்களைச் சந்திக்க ஹத்ராஸ் சென்றார்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் NCW தலைவர் யாரோ அவருக்காக குடை பிடித்திருப்பதை போல வீடியோக்கள் வெளியாகின. வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய சமூக ஊடகங்களில் பல பயனர்கள் NCW தலைவரால் ஏன் குடையைப் பிடிக்க முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டனர்.

    இதற்கு பதிலளித்த மஹுவா மொய்த்ரா,"அவர் தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கி பிடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்திருப்பார்" என்று பதிவிட்டார்.

    NCW பதில்

    ரேகா ஷர்மாவின் பதிலும், NCW வின் எதிர்வினையும்

    இதற்கு பதிலளித்த ரேகா ஷர்மா,"அவர் தனது வேலையில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் மக்களை ட்ரோல் செய்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார். மேலும் ட்ரோலர்களுக்கு எனது நேரத்தை நான் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.

    ரேகா ஷர்மாவும் இந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியதுடன், தான் குடைக்குள் நிற்கவில்லை என்றும் கூறினார்.

    மொய்த்ராவின் கருத்து குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோருக்கும் ரேகா சர்மா கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் NCW மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக சுவோ மோட்டோவாக இந்த வழக்கினை விசாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேலும், மஹுவா மொய்த்ராவின் இழிவான கருத்துக்களை தானாக முன்வந்து எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய முயன்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The National Commission for Women has taken suo moto cognizance of the derogatory remark made by Ms. Mahua Moitra, Member of Parliament, against Ms. Rekha Sharma, Chairperson, NCW. The crude remarks are outrageous and a violation of a woman's right to dignity. The Commission…

    — NCW (@NCWIndia) July 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹுவா மொய்த்ரா
    திரிணாமுல் காங்கிரஸ்
    மகளிர் ஆணையம்

    சமீபத்திய

    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி

    மஹுவா மொய்த்ரா

    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம்
    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை தேர்தல்

    திரிணாமுல் காங்கிரஸ்

    வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்  மேற்கு வங்காளம்
    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி  மேற்கு வங்காளம்
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு  மாநிலங்களவை
    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலின்

    மகளிர் ஆணையம்

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு த்ரிஷா
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! மன்சூர் அலிகான்
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025