NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    இந்தியா

    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023, 05:30 pm 1 நிமிட வாசிப்பு
    இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
    சென்னை உயர்நீதிமன்றம் - இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து ரத்து செய்து உத்தரவு

    சென்னை: இஸ்லாமிய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கணவரை பிரிய குழா பெறுவார்கள். இதனை திருமணம் செய்து வைக்கும் ஜமாத்துக்கள், காஜிகள், இஸ்லாமிய இயக்கங்கள், ஷரீஅத் கவுன்சில் மூலம் இஸ்லாமிய பெண்கள் பெற்றுவந்தனர். இதற்கு இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் அனுமதியுள்ள நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஷரீஅத் கவுன்சிலில் ஒரு பெண் தனது கணவரை 2017ம் ஆண்டு குழா மூலம் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த அமைப்பின் மூலம் தனது மனைவி பெற்ற சான்றிதழை ரத்துசெய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல அந்த அமைப்பு ஒன்றும் நீதிமன்றம் அல்ல-நீதிபதி

    இதனிடையே, முகலாயர் ஆட்சி, வெள்ளியர்கள் ஆட்சியில் இருந்தபொழுது இயற்றப்பட்ட சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் செல்லாது என்று 2014ம்ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி அவர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஷரீஅத் கவுன்சில் என்பது தனியார் அமைப்பு தானே தவிர, பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல அது நீதிமன்றங்கள் அல்ல என்று குறிப்பிட்டார். இதனால் அந்த அமைப்பு அளித்த சான்றிதழ் செல்லாது. மேலும் இந்த அமைப்பின் மூலம் விவாகரத்து பெற்ற பெண்ணின் விவாகரத்து ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற பிரச்சனைக்கு கணவன்-மனைவி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைகுழு அல்லது குடும்பநல நீதிமன்றத்தையே நாடவேண்டும் என்றும் கூறி தீர்ப்பளித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உலக கோப்பை
    இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா
    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out! ஸ்மார்ட்போன்

    இந்தியா

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023