NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்

    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 18, 2023
    07:36 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரியில் சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு ஓடியோடி பக்தர்கள் தரிசனத்தை மேற்கொள்கிறார்கள்.

    திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்காடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்காடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்காடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதன்படி, இந்த சிவாலய ஓட்டமானது நேற்று துவங்கியது, சிவராத்திரி தினமான இன்று இரண்டாவது நாளாக வெகு விமர்சையாக இந்த சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    இதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ளார்கள். இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்கள் காவி நிறத்தில் ஆடை அணிந்து, கையில் ஒரு பனை விசிறியும், மற்றொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்கள்.

    108 கி.மீ., தூரம்

    7 நாட்களுக்கு முன்னராக மாலை அணிந்து விரதம்

    இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ., ஆகும். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஓடும் பொழுது கோவிந்தா, கோபாலா என்று நாராயண நாமத்தை கூறியவாறே ஓடுவார்கள் என்பது இதில் ஓர் சிறப்பான விஷயமாகும்.

    மேலும் இந்த சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் 7 நாட்களுக்கு முன்னராக மாலை அணிந்து விரதம் இருக்க துவங்குவார்களாம்.

    காலை, மாலை என இரு வேளைகளும் நீராடி சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவர்.

    வெறும் சைவ உணவுகளை மட்டுமே உண்டு இந்த விரதத்தினை அவர்கள் மேற்கொள்வார்களாம்.

    சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்களுக்கு வழி நெடுக்கும் பொதுமக்கள் குடிநீர், மோர், பழங்கள், கஞ்சி போன்ற உணவு பொருட்களை வழங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025