வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இந்த புயல் இன்று மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 27) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை பின்வரும் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது: சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை
புயல்
ஆந்திராவில் கரையை கடக்கும் 'மோந்தா'
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை, திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் மேலும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி மாலை அல்லது இரவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Cyclonic Storm “Montha” [Pronunciation : Mon-Tha] over Southwest & adjoining Southeast Bay of Bengal moved west-northwestwards and lay centered at 0230 hrs IST of today, the 27th October 2025, over the same area. https://t.co/BUS94cLzEB pic.twitter.com/hNC3FPcSqD
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 26, 2025