NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 
    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 14, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை கடற்படை கைது செய்து தற்போது தற்போது அந்நாட்டு வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று(டிச.,14) கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், 'புதுக்கோட்டை, ஜெகதாப்பாட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்னும் பதிவெண் கொண்ட இயந்திர படகில் நேற்று(டிச.,13) மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களை படகுடன் சேர்த்து அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, கடந்த ஒருவாரத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

    கடிதம் 

    தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை 

    தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இலங்கை கடற்படையினர் இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இது போன்ற செயல்களால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பெரும் அச்சத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து முதல்வர் தனது கடிதத்தில், மேற்கூறப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் ஒரு படகை தவிர்த்து ஏற்கனவே இலங்கைவசம் 39 மீனவர்கள் மற்றும் 137 படகுகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    எனவே, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வரின் பதிவு 

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 #மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு… pic.twitter.com/SeklwHUz9R — DMK (@arivalayam) December 14, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    மு.க ஸ்டாலின்
    வெளியுறவுத்துறை
    இலங்கை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கைது

    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை
    சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு  ஆந்திரா
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கொலை

    மு.க ஸ்டாலின்

    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு இந்தியா
    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் தமிழ்நாடு
    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம் கனமழை

    வெளியுறவுத்துறை

    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  இந்தியா
    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்

    இலங்கை

    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இந்தியா
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்  கடற்படை
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025