NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி
    ஐஸ்வால் பகுதியில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    மிசோரத்தின் சைராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில்வே பாலம் இன்று(ஆகஸ்ட் 23) இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    ஐஸ்வால் பகுதியில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

    சம்பவம் நடந்த போது, 35-40 தொழிலாளர்கள் அந்த ரயில்வே பாலத்தில் பணியுரிந்து கொண்டிருந்தனர்.

    அதனால், மேலும் பல தொழிலாளர்கள் அந்த இடத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    "இடிபாடுகளில் இருந்து இதுவரை பதினேழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை" என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    தகிப்பி

    காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் 

    மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    "மிசோரத்தில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன." என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

    "அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என்று மிசோரத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு எல்லை ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக NF ரயில்வேயின் CPRO, சப்யாசாச்சி தே கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மிசோரத்தின்  முதலமைச்சர் ஜோரம்தங்காவின் ட்விட்டர் பதிவு 

    Under construction railway over bridge at Sairang, near Aizawl collapsed today; atleast 17 workers died: Rescue under progress.

    Deeply saddened and affected by this tragedy. I extend my deepest condolences to all the bereaved families and wishing a speedy recovery to the… pic.twitter.com/IbmjtHSPT7

    — Zoramthanga (@ZoramthangaCM) August 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா வில்வித்தை
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? கல்வி
    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி துப்பாக்கிச் சுடுதல்
    இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு பெங்களூர்

    நரேந்திர மோடி

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் இந்தியா
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இந்தியா
    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா

    பிரதமர் மோடி

    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025