NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
    தலைவர்கள் சிலை அமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன்

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

    எழுதியவர் Nivetha P
    Jan 26, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தியாக சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (ஜன.,24) நேரில் சென்றுள்ளார்.

    அப்போது, காந்திமண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கான சிலைகள் விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    மார்பளவு சிலை

    கோவை வ.உ.சி. மைதானத்திலும் கப்பலோட்டிய தமிழர் சிலை - மு.பெ.சாமிநாதன்

    காந்தி மண்டப வளாகத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்திற்கான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் சுப்பராயன் சிலையும் அமைக்கப்படவுள்ளது. கப்பலோட்டிய தமிழர் வஉசி இழுத்த செக்கு இங்கே உள்ளது.

    அதனுடைய அரங்கம் புதுப்பிக்கப்பட்டு மார்பளவு சிலை வைக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், கோவை மத்திய சிறையில் இருக்கும் பொழுது தான் வஉசி செக்கு இழுத்தார்.

    எனவே, கோவை வ.உ.சி. மைதானத்திலும் அவரது சிலை வைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

    அதே போல் கட்டபொம்மன் சிலை 98% நிறைவடைந்துள்ளது என்றும், மருது சகோதரர்கள் சிலையும் கிட்டத்தட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோவை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025