NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம் 
    சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம்

    சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 05, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 10% வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    இதன் காரணமாக வாகனஓட்டிகள் நீண்டநேரம் சிக்னல்களில் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளதால், அந்நேரத்தினை குறைக்கவும், அந்நேரத்தில் அவர்களுக்கு இதமான மெல்லிசைப்பாடல்கள் இசைக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை முடிவுச்செய்தது.

    அதன்படி காத்திருப்பு நேரத்தினை குறைக்கும் வகையில் ரூ.15கோடி செலவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய 302 சிக்னல்களை இயக்க போக்குவரத்துத்துறை கடந்தாண்டு,மே மாதம் முடிவு செய்தது.

    அதனைத்தொடர்ந்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகனஓட்டிகளின் மனஅழுத்தத்தினை குறைக்க போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த செய்திகள் மற்றும் இதமான மியூசிக் இசைக்கத்திட்டமிட்டு கடந்த 2022.,ஏப்ரல் மாதம் 6ம்தேதி இந்த திட்டம் சென்னையின் முக்கியப்பகுதிகளான 105 இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

    உத்தரவு 

    சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு 

    இந்நிலையில், தனியார் பண்பலை நிறுவனங்கள் உதவியுடன் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் இசையில் உருவான பாடல்கள் இசையமைக்கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தற்போது, இவ்வாறு சிக்னல்களில் ஒலிபரப்பப்படும் போக்குவரத்து விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் மெல்லிசை பாடல்கள் காரணமாக வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சிக்னல்களில் ஒலிபரப்பாகும் மியூசிக் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    சென்னை

    சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது  பிரதமர் மோடி
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  மின்சார வாரியம்
    ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி ஐபிஎல்
    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  தமிழ்நாடு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025