NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு 
    எல்லை மாநிலங்களில் அமைதியின்மை நிலவி வருவது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கு மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு உள்ளது என்றும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே குற்றம்சாட்டியுள்ளார்.

    எல்லை மாநிலங்களில் அமைதியின்மை நிலவி வருவது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பிற்கு மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்திய சர்வதேச மையத்தில் 'தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடியபோது, மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஜெனரல்(ஓய்வு) நரவனே, "பதவியில் இருப்பவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

    இஅவ்

    இந்த குழுக்களுக்கு பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது 

    மேலும், "இதில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு இல்லை என்று நிராகரித்துவிட முடியாது. நான் பேச்சுக்காக சொல்லவில்லை, நிச்சயமாக அவைகளின் ஈடுபாடு உள்ளது. முக்கியமாக, பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.

    இந்த குழுக்களுக்கு பல ஆண்டுகளாக சீனா உதவி வருகிறது என்றும், தற்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதற்கு பிறகு, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையில் போதைப்பொருள் கடத்தலின் பங்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "போதைப்பொருள் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்கள் தற்போது அதிகரித்து கொண்டே போகிறது." என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    சீனா
    போதைப்பொருள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு ராகுல் காந்தி
    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் மத்திய அரசு
    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம் ராகுல் காந்தி
    கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர் கலவரம்

    சீனா

    அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி அருணாச்சல பிரதேசம்
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  இந்தியா
    புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்! மைக்ரோசாஃப்ட்
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்? பெங்களூர்

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025