NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை 
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    07:40 pm
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை 
    மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் ஸ்வாரஸ்யங்கள் ஓர் பார்வை

    மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக லட்சக்கணக்கான பக்தர்கள்சூழ நடைபெறுவது வழக்கம். இந்த அழகர் சித்திரை திருவிழாவானது 10நாட்கள் நடைபெறும். முதல் 2நாட்கள் அழகர் கோயிலில் இருப்பார். 3ம்நாள் மாலை மதுரையினை நோக்கிப்புறப்பட்டு அலங்காநல்லூர் சென்றடைகிறார். அங்கு அழகரை குதிரைவாகனத்தில் தூக்கிவைத்து அலங்காரம் செய்வார்கள். அங்கிருந்து தேனூருக்கு வந்து வைகையாற்றில் அழகர் இறங்குவார். அதன்பின்னர் வண்டியூருக்கு வந்து மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பார். 4ம்நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்துசேருகிறார். அதற்கு மதுரையின் எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. தல்லாகுளம் பெருமாள்கோயிலுக்கு வரும் அழகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடக்கும். அவருக்கான அலங்காரப்பொருட்கள் ஒருப்பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

    2/2

    உற்சவ சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டு கொண்டாட்டம் நிறைவுபெறும் 

    அந்த மரப்பெட்டியில் இருந்து அர்ச்சகர் கைவிட்டு எடுக்கும் பட்டுப்புடவை தான் அழகருக்கு அணிவிக்கப்படும். அதன் நிறத்தினை கொண்டு இந்தாண்டு எப்படி இருக்கும் என்று கூறப்படுவது ஒரு நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 5ம்நாள் பவுர்ணமி தினத்தன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். ஆற்றுக்குள் அழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார், இருவரும் மாலை மாற்றி கொள்வார்கள். 6ம்நாள் அதிகாலை அழகருக்கு வண்டியூரில் ஏகாந்தசேவை நடக்கும். 7ம்நாள் காலை அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். 8ம்நாள் அதிகாலை பூப்பல்லக்கில் மலைநோக்கி கிளம்பும் அழகர் வழிநெடுக்க பூஜைகளை ஏற்றுக்கொண்டு 9ம்நாள் காலையில் அழகர் கோயிலினை சென்றடைவார். 10ம்நாள் பயணக்களைப்பு நீங்க அவருக்கு உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கும். இத்துடன் 10 நாட்கள் கொண்டாட்டம் நிறைவுபெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மதுரை
    சித்திரை திருவிழா

    மதுரை

    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு  சித்திரை திருவிழா
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்  திருவிழா
    மதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்  தமிழ்நாடு
    மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு  சித்திரை திருவிழா

    சித்திரை திருவிழா

    சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்! திருப்பூர்
    மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்  மதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023