NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை
    இந்தியா

    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை

    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை
    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023, 06:20 pm 0 நிமிட வாசிப்பு
    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை
    சபரிமலை ஐயப்பன் கோயில்

    அரவணை பாயசமானது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்லும் முக்கிய பிரசாதங்களில் ஒன்றாகும். தற்போது விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்து, அரவணை பாயசத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதற்கிடையில், சபரிமலை கோயிலில் ஏலக்காய் டெண்டர் நிராகரிக்கப்பட்ட ஏலக்காய் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் என்பவர், கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏலக்காய் தரத்தின் மீது ஐயம் கொண்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, அரவணை பாயசத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள உணவு பொருள் ஆய்வகத்தில் அரவணை பாயசம் ஆய்வு செய்யப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சி மருந்து கொண்ட ஏலக்காயை பயன்படுத்தியது அம்பலம்

    இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பூச்சி பூச்சிமருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் ஆய்வகத்தின் அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் தேசவம் போர்டு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருவதால், அரவணை பாயசம் கூடுதலாக தேவைப்பட்டுள்ளது. இதற்காக அரவணை பாயசத்தில் பயன்படுத்துவதற்கான ஏலக்காயை தேவசம் போர்டு உள்ளூர் சந்தையிலேயே கொள்முதல் செய்துள்ளது. இது குறித்து தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023