NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு
    மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு

    மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jul 12, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    மகாபலிபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலாத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரான ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்திப்பு நிகழ்ந்தது.

    அப்போது, ஒளி உமிழ்வு குறைவான விளக்குகள் கொண்டு அப்பகுதி அலங்கரிக்கப்பட்டது.

    ஒளி வெளிச்சத்தில் மிளிர்ந்த பாரம்பரிய சிற்பங்களை காண பார்வையாளருக்கான நேரமானது இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டது.

    அதன் பின்னர் மழைநீர் காரணமாக அந்த விளக்குகள் பழுதாகியது.

    மின்னொளி 

    14 பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க தொல்லியல்துறை உத்தரவு 

    அதனைத்தொடர்ந்து கொரோனா காலம் முடிந்தப்பிறகு பயணியர்களை மீண்டும் இரவில் அனுமதிக்கலாம் என்று எண்ணிய தொல்லியல்துறை தரைமட்டத்திற்குமேல் மின்விளக்குகளை அமைத்தனர்.

    அதுவும் பயன்படுத்தப்படாமல் போகவே, பழுதானது.

    தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஜி20 அமைப்பிலுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், மகாபலிபுரம் வருகை தந்தப்பொழுது மீண்டும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் சிற்பங்களும், கோயிலும் மின்னொளியில் மிளிர்ந்தது.

    ஆனால், அப்பொழுது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது தஞ்சாவூர் பிரகஸ்தீஸ்வரர் கோயில் அருகேயுள்ள சிவகங்கை பூங்கா, கடற்கரைக்கோயில், கங்கைக்கொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 14 பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை இரவு 9 மணிவரை அனுமதிக்க தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜூலை 15ம்தேதி முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி நேரமானது நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொல்லியல் துறை
    மகாபலிபுரம்
    கொரோனா
    இந்தியா

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்

    மகாபலிபுரம்

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் தமிழ்நாடு
    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி இந்தியா
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது காவல்துறை

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம் மாரடைப்பு

    இந்தியா

    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இஸ்ரோ
    இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2 வணிகம்
    உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்  இங்கிலாந்து
    மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா  மைக்ரோசாஃப்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025