Page Loader
சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சந்திரயான் 3 இன்று விண்ணில் பாய்வதையடுத்து பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2023
02:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்னும் சில மணித்துளிகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இன்று விண்ணில் ஏவப்படும் இந்த விண்கலம், 40 நாட்களில் சந்திரனின் நிலப்பரப்பை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 3.84 லட்சம் கி.மீ பயணப்பட்டு, சந்திரனை அடையும். குறிப்பாக இந்த நாளை எதற்கு தேர்வு செய்தனர் என்ற விளக்கமும் இஸ்ரோ நிறுவனம் அளித்துள்ளது. இன்றிலிருந்து தோராயமாக 40 நாட்களில், நிலவுக்கும், பூமிக்குமாக இடைவெளி குறைவாக இருக்குமென்றும், அதனால் குறிப்பிட்ட இலக்கை சந்திரயான் 3 எளிதாக அடையமுடியும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்ற இந்த 3 வல்லரசுகளை அடுத்து, நிலவை தொடவிருக்கும் நாடு இந்தியா. இத்தகைய பெருமைமிகு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, இந்திய தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

embed

பிரதமர் மோடி வாழ்த்து 

Best wishes for Chandrayaan-3 mission! I urge you all to know more about this Mission and the strides we have made in space, science and innovation. It will make you all very proud. https://t.co/NKiuxS0QaE— Narendra Modi (@narendramodi) July 14, 2023

embed

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து 

आज का यह दिन, भारतीय इतिहास में एक विशेष महत्व का है। मिशन चंद्रयान-3 की लांचिंग, नये भारत की आकांक्षाओं को नया आकाश देने जा रही है। इस मिशन में हमारे देश के वैज्ञानिकों की वर्षों की मेहनत, लगन, समर्पण और प्रतिबद्धता जुड़ी हुई है।यह मिशन सफल हो, इसके लिए @ISRO की पूरी टीम को... pic.twitter.com/apkrE7qwF3— Rajnath Singh (@rajnathsingh) July 14, 2023