NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    05:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர், அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமானது என்று செய்திகள் வெளியானது.

    தொடர்ந்து, இந்த விபத்திற்கு சிலிண்டர் கசிவு தான் காரணம் என்று தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் மாநிலங்களவையில் அதிமுக கட்சியின் எம்.பி.தம்பிதுரை கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

    அதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு கேஸ் சிலிண்டரின் கசிவு காரணமில்லை என்று கூறியுள்ளார்.

    விபத்து 

    தக்க நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் 

    மேலும், தமிழக அரசு இது குறித்து தகுந்த விசாரணையினை நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி எம்.பி.தம்பிதுரை இன்று(ஆகஸ்ட்.,1)டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின் பொழுது, கிருஷ்ணகிரியில் நடந்த இந்த வெடி விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, இது குறித்து அவர் ஒரு கடிதத்தையும் அமைச்சரிடம் வழங்கினார்.

    முன்னதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 30ம்தேதி இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    அதன்பின் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஐ
    அதிமுக
    தமிழ்நாடு
    அமித்ஷா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    அதிமுக

    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து எடப்பாடி கே பழனிசாமி
    கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு ஓ.பன்னீர் செல்வம்

    தமிழ்நாடு

    வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  திருவிழா
    தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி  ரஜினிகாந்த்
    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு  தமிழக அரசு
    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு  இந்தியா

    அமித்ஷா

    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025