NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

    எழுதியவர் Nivetha P
    Feb 01, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் தொடர்பு கொள்ளும் நோயாளிகளுக்கு ஆன்லைனிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம்(ஜன.,30) பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஓர் பெண் மருத்துவர் எப்பொழுதும் போல ஆன்லைன் மருத்துவ ஆலோசனை பணியில் ஈடுபட்டு சிகிச்சை அளித்து கொண்டிருந்துள்ளார்.

    அப்போது திருச்சூரை சேர்ந்த முகம்மது சுகைப் (21) என்னும் வாலிபர் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைக்காக ஆன்லைனில் வந்துள்ளார்.

    கைது நடவடிக்கை

    சைபர் க்ரைம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் மருத்துவர்

    இந்நிலையில், ஆன்லைனில் வந்த முகம்மது சுகைப் என்னும் வாலிபர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர் உடனடியாக அந்த வாலிபரின் ஆன்லைன் இணைப்பை துண்டித்துள்ளார்.

    இதன் பின்னர், இது குறித்து சைபர் க்ரைமில் அந்த பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.

    அதனையடுத்து, ஆரன்முளா காவல் நிலையத்திலும் அப்பெண் மருத்துவர் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன் பேரில் வழக்கு பதிவு செய்த ஆரன்முளா போலீசார் முகம்மது சுகைப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுகாதாரத் துறை
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்

    இந்தியா

    BharOS எவ்வளவு பாதுகாப்பானது? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து! தொழில்நுட்பம்
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா பாகிஸ்தான்
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? வங்கிக் கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025