NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
    இந்தியா

    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை

    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023, 03:53 pm 0 நிமிட வாசிப்பு
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
    உபி போலீசாரால் கைது செய்யப்பட்ட கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை

    கேரளா:கடந்த 2020ம்ஆண்டு செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் மாற்றுசாதியை சார்ந்த 4பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. படுகாயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்ட நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து அப்பெண்ணின் உடல் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தினர். இதனால் காவல்துறை சார்பிலேயே அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்த செய்திகளை முழுவதுமாக அறிய அங்கு சென்ற கேரளா பத்திரிகையாளரான சித்திக் கப்பனை உபி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சிறையில் சித்திக் கப்பன் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார்.

    மீண்டும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இன்று விடுதலை

    கைது செய்யப்பட்ட சித்திக் கப்பன் சிறையில் வழுக்கி விழுந்ததாகவும், கொரோனா காலத்தில் நோய்தொற்று ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்து உணவளிக்காமல், இயற்கை உபாதைகளை கழிக்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து பேட்டியெடுக்க சென்றது எப்படி குற்றமாகும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அவர் சட்டத்துக்கு விரோதமாக பணவரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி அமலாக்கத்துறை அவரை கைதுசெய்தது. இது மீண்டும் பேசுபொருளாக மாறிய நிலையில், லக்னோ நீதிமன்றம் அவருக்கு இந்த வழக்கில் இருந்து விடுதலை அளித்ததோடு, அவருக்கு ஜாமீன் வழங்கியது. உபி சிறையிலிருந்து வெளிவந்த சித்திக் குப்பன், 28மாதங்கள் சிறையிருந்து தற்போது விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சி என்றும் தன்மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என்றும் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கேரளா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    கேரளா

    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன்
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது காவல்துறை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் காவல்துறை
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023