NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
    உபி போலீசாரால் கைது செய்யப்பட்ட கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை

    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை

    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா:கடந்த 2020ம்ஆண்டு செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் மாற்றுசாதியை சார்ந்த 4பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    படுகாயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்ட நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதனைதொடர்ந்து அப்பெண்ணின் உடல் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தினர்.

    இதனால் காவல்துறை சார்பிலேயே அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    இதுகுறித்த செய்திகளை முழுவதுமாக அறிய அங்கு சென்ற கேரளா பத்திரிகையாளரான சித்திக் கப்பனை உபி போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து சிறையில் சித்திக் கப்பன் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார்.

    பொய்யான வழக்கு

    மீண்டும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இன்று விடுதலை

    கைது செய்யப்பட்ட சித்திக் கப்பன் சிறையில் வழுக்கி விழுந்ததாகவும், கொரோனா காலத்தில் நோய்தொற்று ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்து உணவளிக்காமல், இயற்கை உபாதைகளை கழிக்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.

    இதனையடுத்து பேட்டியெடுக்க சென்றது எப்படி குற்றமாகும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

    ஆனால் அவர் சட்டத்துக்கு விரோதமாக பணவரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி அமலாக்கத்துறை அவரை கைதுசெய்தது.

    இது மீண்டும் பேசுபொருளாக மாறிய நிலையில், லக்னோ நீதிமன்றம் அவருக்கு இந்த வழக்கில் இருந்து விடுதலை அளித்ததோடு, அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    உபி சிறையிலிருந்து வெளிவந்த சித்திக் குப்பன், 28மாதங்கள் சிறையிருந்து தற்போது விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சி என்றும் தன்மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025