NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 25, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் பருகியதில், 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தினசரி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    சட்டசபை கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவையின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக்கூறி அதிமுகவினரை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அய்யாவு உத்தரவிட்டார்.

    அதோடு, இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு தடையும் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தார் எடப்பாடி கே பழனிசாமி.

    ஈபிஎஸ்

    ஆளுநரிடம் மனு அளித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

    சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மனு அளித்தார்.

    அவருடன் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" எனத் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆளுநரிடம் மனு அளித்த அதிமுகவினர்

    ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

    கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநரிடம் ஈபிஎஸ் மனு.

    விஷ சாராய விவகாரத்தில், ஈபிஎஸ் சிபிஐ விசாரணை கோரி வரும் நிலையில் ஆளுநருடன் சந்திப்பு.#EdappadiPalanisamy #EPS #ADMK #kallakkurichi… pic.twitter.com/rJ4C39JxSX

    — Reflect News Tamil (@reflectnewstn) June 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கள்ளக்குறிச்சி
    எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு இந்தியா
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி  சட்டப்பேரவை
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58 -ஆக உயர்வு; மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி சிபிசிஐடி

    எடப்பாடி கே பழனிசாமி

    தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து  ஓ.பன்னீர் செல்வம்
    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு தமிழ்நாடு
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து  விழுப்புரம்
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி  அதிமுக

    அதிமுக

    அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தமிழ்நாடு
    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025