NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
    குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை - சென்னை உயர்நீதிமன்றம்

    பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்திற்கு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னையில் ஓர் தம்பதி தனது மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்றுத்தருமாறு குடும்பநல நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், தாய் தந்தையருக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20,000 வழங்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இடைக்கால ஜீவனாம்சம்

    தம்பதியின் மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி-3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு

    2014ம்ஆண்டு பதியப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    பின்னர், விசாரணை நடந்து முடிந்த நிலையில், இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்ய முடியாது என்றுகூறி அந்த தம்பதியரின் மகன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தொடர்ந்து, பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க குடும்பநல நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கினை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக, விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் தம்பதியர்களின் குழந்தைகள் நலன் கருதி இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என்றும் குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025