NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
    இந்தியா

    பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை

    பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023, 08:25 am 1 நிமிட வாசிப்பு
    பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகள்-குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை
    குறித்த காலத்தில் விசாரிக்க நிபந்தனை - சென்னை உயர்நீதிமன்றம்

    பராமரிப்பு தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் குடும்பநல நீதிமன்றத்திற்கு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஓர் தம்பதி தனது மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்றுத்தருமாறு குடும்பநல நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், தாய் தந்தையருக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.20,000 வழங்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    தம்பதியின் மகன் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி-3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு

    2014ம்ஆண்டு பதியப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். பின்னர், விசாரணை நடந்து முடிந்த நிலையில், இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்ய முடியாது என்றுகூறி அந்த தம்பதியரின் மகன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க குடும்பநல நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கினை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் தம்பதியர்களின் குழந்தைகள் நலன் கருதி இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடலாம் என்றும் குடும்பநல நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    சென்னை உயர் நீதிமன்றம்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023