NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

    மேலும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் 10ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதடு பிளவு, அன்னப் பிளவு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.

    மேற்கண்ட விழாக்களில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், ரத்தத்தால் ஓவியங்கள் வரையப்பட்டு பரிசாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    சுகாதாரத்துறை அமைச்சர்

    அதிகரிக்கும் 'பிளட் ஆர்ட்' கலாச்சாரம் - பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை

    தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரெண்டாகி வருவனவற்றுள் ஒன்று தான் இந்த 'பிளட் ஆர்ட்'.

    தங்கள் விருப்பமானவர்களுக்கு தங்களது ரத்தத்தை எடுத்து அதில் ஓவியம் வரையப்பெற்று பரிசு அளிப்பது இப்பொழுது அதிகரித்து வருகிறது.

    இது சரியானது அல்ல என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாகவே, 'பிளட் ஆர்ட்' குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஓவியம் வரைய பல வழிகள் உள்ளது. ரத்தத்தால் ஓவியம் வரைவது சரியானது அல்ல.

    இது கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு, ஒருவரது உடலிலிருந்து முறையற்ற வழியில் எடுக்கப்படும் ரத்தத்தால் நோய்கள் பரவக்கூடும்.

    இந்த ஓவியத்தால் எச்ஐவி தொற்று கூட வாய்ப்பு உள்ளதால் இந்த கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்! இந்தியா
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! மாவட்ட செய்திகள்
    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் திருப்பூர்
    இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி! உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025