NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானியான மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட 2 இந்திய ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

    இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவராவார்.

    இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியுள்ளது, இவரது மனைவி பெயர் சாரதா.

    இவரது மறைவு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இறுதி சடங்கு

    உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    இந்நிலையில் மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு விமான நிலையத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது ஜெயந்த்தின் உறவினர்கள், நண்பர்கள், அக்கிரமவாசிகள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

    இதற்கிடையே, லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி உடல் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    கடந்த 5 மாதங்களில் மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அருணாச்சல பிரதேசம்
    இந்திய ராணுவம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    தமிழ்நாடு

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் போக்குவரத்து காவல்துறை
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18 வானிலை அறிக்கை
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025