NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 
    தற்போது அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு செல்கிறது.

    பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 19, 2023
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு 32 டன் எடை கொண்ட இரண்டாவது IAF MCC சி17 விமானம் புறப்பட்டது." என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியா முதல் முறையாக பாலஸ்தீனத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பியது.

    தற்போது அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு செல்கிறது.

    எல்-அரிஷ் விமான நிலையம் காசா-எகிப்து எல்லையான ரஃபா கிராசிங்கில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    ட்ஜ்வ்க்

    ரஃபா  கிராசிங்கும் முழுமையாக செயல்படுவதில்லை

    ரஃபா கிராசிங் வழியாக தற்போதைக்கு காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும். மற்ற எல்லைகள் எல்லாம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து ரஃபா கிராசிங்கும் முழுமையாக செயல்படுவதில்லை.

    இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு 

    We continue to deliver humanitarian assistance to the people of Palestine.

    Second @IAF_MCC C17 aircraft carrying 32 tonnes of aid departs for the El-Arish Airport in Egypt. pic.twitter.com/bNJ2EOJPaW

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலஸ்தீனம்
    இந்தியா
    காசா
    உலகம்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    பாலஸ்தீனம்

    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    IND vs NED : 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா உலக கோப்பை
    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு டெல்லி
    செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?  டெல்லி

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    உலகம்

    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  விபத்து
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025