NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
    இந்தியா

    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    March 14, 2023 | 04:20 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
    இரு ஆண்டு அறிக்கையை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டார்.

    இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,276 சதுர கிலோமீட்டர் காடுகள் வளர்ந்துள்ளது என்றும் இந்திய மாநில வன அறிக்கை(ISFR)-2021 தெரிவித்துள்ளது. டேராடூனில் உள்ள இந்திய வன ஆய்வின்(FSI), வன வளங்களின் மதிப்பீட்டிற்கான இரு ஆண்டு அறிக்கையை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டார். 2019 ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த மரங்கள் மற்றும் காடுகளின் பரப்பளவில் 1,540 சதுர கிலோமீட்டர் காடுகள் மற்றும் 721 சதுர கிலோமீட்டர் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    பசுமை இந்தியா மிஷன்

    நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், வனப்பகுதியை அதிகரிக்கவும், காடு வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு நடவடிக்கைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவுவதற்கு பசுமை இந்தியா மிஷன் போன்ற பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி வழங்கி வருகிறது. பசுமை இந்தியாவிற்கான தேசிய மிஷன்(GIM) என்பது காலநிலை மாற்றத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் எட்டு தேசிய செயல் திட்டங்களில் ஒன்றாகும். காடு மற்றும் காடு அல்லாத பகுதிகளில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் காடுகளை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023