NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை
    இரு ஆண்டு அறிக்கையை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டார்.

    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,276 சதுர கிலோமீட்டர் காடுகள் வளர்ந்துள்ளது என்றும் இந்திய மாநில வன அறிக்கை(ISFR)-2021 தெரிவித்துள்ளது.

    டேராடூனில் உள்ள இந்திய வன ஆய்வின்(FSI), வன வளங்களின் மதிப்பீட்டிற்கான இரு ஆண்டு அறிக்கையை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டார்.

    2019 ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த மரங்கள் மற்றும் காடுகளின் பரப்பளவில் 1,540 சதுர கிலோமீட்டர் காடுகள் மற்றும் 721 சதுர கிலோமீட்டர் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்தியா

    பசுமை இந்தியா மிஷன்

    நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், வனப்பகுதியை அதிகரிக்கவும், காடு வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு நடவடிக்கைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவுவதற்கு பசுமை இந்தியா மிஷன் போன்ற பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி வழங்கி வருகிறது.

    பசுமை இந்தியாவிற்கான தேசிய மிஷன்(GIM) என்பது காலநிலை மாற்றத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் எட்டு தேசிய செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

    காடு மற்றும் காடு அல்லாத பகுதிகளில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் காடுகளை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது இந்தியா
    RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI இந்தியா
    ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்! தொழில்நுட்பம்
    வைரல் செய்தி: மேட்ரிமோனியல் தளத்தில் பதிவிடப்படும் தகவலை கொண்டு, வேலை தேடும் இளம்பெண் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025