NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
    இந்தியா

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    February 20, 2023 | 12:02 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
    இந்த திட்டத்தில் 5,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செங்கல்பட்டு பட்டிபுலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது. மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியாவுடன் இணைந்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள் மிஷன்- 2023 அறிமுகப்படுத்தபட்டது. இந்த திட்டத்தில் 5,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஒரு மாணவர் செயற்கைக்கோள் ஏவுகணை வெஹிகிள்(ராக்கெட்) மற்றும் 150 PICO செயற்கைக்கோள் ஆராய்ச்சி சோதனை கனசதுரங்களை வடிவமைத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 100 மாணவர்களால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர்.

    மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு

    வானிலை, வளிமண்டல நிலைகள் மற்றும் கதிர்வீச்சு ஆராய்ச்சிக்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்தலாம். ஏவுதல் வெற்றியடைந்தது என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமின்றி STEM(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பற்றியும் கற்றுக்கொண்டதாக இரு அறக்கட்டளைகளும் தெரிவித்துள்ளன. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம், ஈசிஆர் அருகே உள்ள தேவநேரி கிராமத்தில் ஏவப்பட்டது. முக்கிய விருந்தினராக இதில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இஸ்ரோ
    இந்தியா
    தமிழ்நாடு
    தமிழிசை சௌந்தரராஜன்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள் சந்திரயான்
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் சந்திரயான் 3

    இந்தியா

    கூகுள் பார்ட்டை மீண்டும் சரிசெய்யுங்கள்! ஊழியர்களுக்கு விடுத்த தகவல் கூகுள்
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை குஜராத்
    ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி! மெட்டா
    பிப்ரவரி 19க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்

    தமிழ்நாடு

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா? உடல் நலம்
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு

    தமிழிசை சௌந்தரராஜன்

    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் கோவை
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023