NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது
    இந்த திட்டத்தில் 5,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2023
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செங்கல்பட்டு பட்டிபுலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது.

    மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியாவுடன் இணைந்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள் மிஷன்- 2023 அறிமுகப்படுத்தபட்டது.

    இந்த திட்டத்தில் 5,000 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஒரு மாணவர் செயற்கைக்கோள் ஏவுகணை வெஹிகிள்(ராக்கெட்) மற்றும் 150 PICO செயற்கைக்கோள் ஆராய்ச்சி சோதனை கனசதுரங்களை வடிவமைத்துள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 100 மாணவர்களால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கினர்.

    தமிழ்நாடு

    மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு

    வானிலை, வளிமண்டல நிலைகள் மற்றும் கதிர்வீச்சு ஆராய்ச்சிக்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்தலாம்.

    ஏவுதல் வெற்றியடைந்தது என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமின்றி STEM(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பற்றியும் கற்றுக்கொண்டதாக இரு அறக்கட்டளைகளும் தெரிவித்துள்ளன.

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம், ஈசிஆர் அருகே உள்ள தேவநேரி கிராமத்தில் ஏவப்பட்டது. முக்கிய விருந்தினராக இதில் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா

    இந்தியா

    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே சேமிப்பு திட்டங்கள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமரி
    கந்தரா படத்தின் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' விருது வைரல் செய்தி
    ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை தொழில்நுட்பம்

    தமிழ்நாடு

    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் இலங்கை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு திருவண்ணாமலை
    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை மதுரை
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025