சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்நிலையில், சூடானில் இருந்து 3,800 இந்தியர்களை ஆபரேஷன் காவேரி மீட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சூடானில் இருந்து 47 வெளியேற்றப்பட்டவர்களுடன் IAF C-130J விமானம் ஜெட்டாவிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருக்கிறது. அப்போது ஆபரேஷன் காவேரியின் கீழ் இப்போது சூடானில் இருந்து கிட்டத்தட்ட 3,800 பேர் மீட்கப்பட்டுள்ளனர்" என பாக்சி தெரிவித்துள்ளார்.