NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம் 

    'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2024
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.

    மே 2023 இல் இன மோதல் வெடித்ததைத் தொடர்ந்து மணிப்பூரில் குறிப்பிடத்தக்கமனித உரிமை மீறல்கள் நடந்ததாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அது போக, பிரதமர் மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டதற்கு பிறகு, பிபிசி மீது வரி அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு நாடுகடந்த அடக்குமுறை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா 

    மணிப்பூரில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாக தகவல் 

    மெய்தே மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையில் நடந்து வரும் மோதல் காரணமாக மணிப்பூரில் குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகவும் 60,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு மே மாதம், மெய்தேகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம்(ATSUM) நடத்திய பழங்குடியின ஒற்றுமை அணிவகுப்புக்குப் பிறகு அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது.

    சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனைகள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    இந்தியா
    அமெரிக்கா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  காவல்துறை
    நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்? நாடாளுமன்றம்
    மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன கலவரம்
    மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு  உள்துறை

    இந்தியா

    'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பாரத ரத்னா
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  அமெரிக்கா
    இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா பீகார்

    அமெரிக்கா

    எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்  எலான் மஸ்க்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி உலகம்
    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்  ஜோ பைடன்
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை ரஷ்யா

    வெளியுறவுத்துறை

    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
    'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இந்தியா
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025