NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி
    தொடங்கப்பட்டது 'நம்ம ஸ்கூல்' திட்டம்(படம்: Oneindia Tamil)

    பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 22, 2022
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    கிண்டி ஐ.டிசி. சோழா ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் இன்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் இதைத் தொடங்கி வைத்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் நிதி மட்டுமில்லாமல் தமிழ அரசு சார்பாக வகுப்பறைகள் அமைப்பதற்கும் பள்ளிகள் முன்னேற்றத்திற்கும் 800 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், தமிழக பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றுவதற்கே இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று யார் வேண்டுமானாலும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி வழங்கலாம்.

    19 Dec 2022

    'நம்ம ஸ்கூல்' திட்டத்தின் நோக்கம்:

    பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் சேர்த்து அவர்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வு நிதி(சி.எஸ்.ஆர்) என்னும் நிதியைப் பெற்று அதன் உதவியுடன் பள்ளிகள் வளர்ச்சி பணிகளை செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

    அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இது.

    இதில் கிடைக்கும் நிதிகளைக் வைத்து பள்ளிகளின் சுற்றுச்சுவர், கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்றவைக் கட்டப்படும் அல்லது பராமரிக்கப்படும்.

    இதற்காக அறிமுகப்படுத்தப்படும் இணையதளத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம்.

    கொடுக்கப்பட்ட நிதி எதற்கு செலவழிக்கப்பட்டது என்பதையும் அதே இணையதளத்தின் மூலம் கண்காணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் தென்காசி
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025