NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி

    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி

    எழுதியவர் Nivetha P
    Apr 01, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    அதற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்த கொடுமையானது முடிந்தப்பாடில்லை.

    அவ்வாறான ஓர் சம்பவமே மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

    உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் மிக பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த மாலில் ஹவுஸ் கீப்பிங் பணியில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

    அவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி எப்பொழுதும் போல பணிக்கு வந்துள்ளார்.

    பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்னர் தனது சீருடையினை மாற்றி கொள்ள உடை மாற்றும் அறையின் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

    காவல்நிலையத்தில் புகார்

    கணவரின் உறுதுணையோடு போலீசில் புகார் அளித்த பெண்

    அப்போது அதே மாலில் வேலை பார்க்கும் பாதுகாப்பு காவலர் ஒருவர் திடீரென அந்த பெண் இருந்த அறைக்குள் சென்றுள்ளார்.

    அவரை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட முயன்றுள்ளார்.

    ஆனால் அந்த பாதுகாப்பு காவலர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

    இதற்கு உடந்தையாக அந்த பெண்ணுடன் வேலை பார்க்கும் இரண்டு ஆண் ஊழியர்களே இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    அச்சத்தில் தனக்கு நேர்ந்தது குறித்து யாரிடமும் முதலில் இதனை தெரிவிக்காமல் இருந்தநிலையில், தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    பின்னர் அவரின் உறுதுணையோடு காவல்துறைக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா உலக வங்கி
    இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 3,016 கொரோனா பாதிப்பு கொரோனா
    சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது சென்னை
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா

    உலகம்

    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! சுற்றுலா
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025