NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
    இந்தியா

    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்

    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023, 04:03 pm 1 நிமிட வாசிப்பு
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
    மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உதவியுடன் 80 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(ஜன 30) கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து இவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோவிலுக்குள் அழைத்து சென்றார் . பெற்றோர்-ஆசிரியர் மாநாட்டின் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆதிக்க சமூகங்களுடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், கிராமத்தில் உள்ள 12 ஆதிக்கக் குழுக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஒடுக்கப்பட்ட மக்களை எதிர்த்து ஆதிக்க சாதியினர் போராட்டம்

    தென்முடியனூர் கிராமத்தில் சுமார் 500 பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கோவிலுக்கு சீல் வைக்கக் கோரி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் பல அமைதிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆதிக்க சமூகத்தினரை வற்புறுத்தி, பட்டியலினத்தவர்களுக்குக் கோயில் நுழைவை அனுமதிக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது. காவல்துறை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் பெங்களூர்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் காவல்துறை

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023