NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
    மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உதவியுடன் 80 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள்

    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(ஜன 30) கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து இவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோவிலுக்குள் அழைத்து சென்றார் .

    பெற்றோர்-ஆசிரியர் மாநாட்டின் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆதிக்க சமூகங்களுடன் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இருப்பினும், கிராமத்தில் உள்ள 12 ஆதிக்கக் குழுக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அதனால், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை

    ஒடுக்கப்பட்ட மக்களை எதிர்த்து ஆதிக்க சாதியினர் போராட்டம்

    தென்முடியனூர் கிராமத்தில் சுமார் 500 பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

    கோவிலுக்கு சீல் வைக்கக் கோரி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் கோயிலுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் பல அமைதிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆதிக்க சமூகத்தினரை வற்புறுத்தி, பட்டியலினத்தவர்களுக்குக் கோயில் நுழைவை அனுமதிக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது.

    காவல்துறை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், பட்டியல் சாதியினர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை

    தமிழ்நாடு

    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு பா ரஞ்சித்
    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் மு.க ஸ்டாலின்
    கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி இந்தியா
    நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025