NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி
    இந்தியா

    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி

    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி
    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023, 04:44 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி
    சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் விஜயலட்சுமி

    சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லித்தரும் பள்ளி ஒன்றினை நடத்திவருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்று இலவசமாக 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தற்காப்பு கலையினை கற்றுக்கொடுத்துள்ளார். 42 வயதில் குடும்பத்தினை ஒருபுறம் கவனித்துக்கொண்டு, மறுபுறம் தான் கற்ற தற்காப்பு கலையினை பெண்களுக்கு கடந்த 5 வருடங்களாக இவர் கற்றுக்கொடுத்து வருவது பாராட்டத்தக்கது என்று கூறப்படுகிறது. இவரிடம் தற்காப்புக்கலை பயிலும் மாணவிகளுக்கு இவர் இரண்டு விஷயங்களை வலியுறுத்துகிறார். முதலாவதாக, யாரேனும் உங்கள் அனுமதியின்றி உங்கள் உடலில் கைவைத்தால் முதலில் அங்கிருந்தவாறே கத்துங்கள், அருகில் இருப்போரிடம் உதவி கோருங்கள். இரண்டாவது விஷயம் உங்கள் அனுமதியின்றி யாரேனும் தொட்டால் அடித்துவிடுங்கள். பிரச்சனை வருமோ என்று பயப்படவேண்டாம் என்று கூறுகிறார்.

    மாணவிகளுக்கு தற்காப்பு கலையின் அவசியத்தை எடுத்துரைத்த விஜயலட்சமி

    அவ்வாறு அடித்துவிட்டு பயப்படாமல் தனக்கு தகவல் அளிக்குமாறும் இவர் கூறுகிறார். அதன்படி பல மாணவிகள் அடித்துவிட்டு இவருக்கு போன்செய்து தகவலளித்துள்ளார்களாம். அவர்களுக்கு இவர் சட்டரீதியாகவும் உதவியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இவர் தனது கூடுதல் கவனத்தை செலுத்தி பயிற்றுவிக்கிறார். இதுகுறித்து விஜயலட்சுமி பேசுகையில், நான் முதலில் இந்த தற்காப்புகலை பயிற்சியை துவங்கும்போது, பலரும் பல கேள்விகளை கேட்டதோடு, ஆண்களுக்குத்தானே தற்காப்புகலை என்றும் கூறினார்கள். அவர்களிடம் மாணவிகளுக்கு தற்காப்புகலை என்பது மிகவும் அவசியம் என எடுத்துரைத்தேன். அதன்பின்னரே பலர் என்னிடம் தற்காப்புகலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்று கூறினார். மேலும் இவரின் அப்பா மற்றும் தாத்தாக்கள் ஆகியோர் சுதந்திர போராட்டவீரர்கள் என்றும், அதனால் இந்த ஆர்வம் தனக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை

    தமிழ்நாடு

    சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  சென்னை
    தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு தமிழக அரசு

    சென்னை

    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  திரையரங்குகள்
    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்!  வந்தே பாரத்
    விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர்  போக்குவரத்து காவல்துறை
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023